செஞ்சோலையில் உதிர்ந்த பூக்களின் நினைவாக..!
வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக் கொன்ற வடுக்களை தமிழனின வலிதனை வரலாறு மறக்குமோ பஞ்செனும் குழலும் பிறையெனும் புருவமும் பல சந்த மாலை மடல் பரணி பாவையர் நஞ்சென வீழ்ந்த குண்டுகளால் குஞ்செனக் கருகிய வல்லிபுனக் கொடுமையை […]









