sri lanka water cut today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு..!

  • Jul 3, 2026 - 09:38 AM
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04.07.2026) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் […]

england reaches womens final | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகளிர் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேற்றம்..!

  • Jul 3, 2026 - 09:35 AM
  • 0 Comments

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்று (02.07.2026) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 170 என்ற வெற்றியிலக்கை […]

world best tourism island sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை..!

  • Jul 3, 2026 - 09:32 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் […]

sri lanka weather winds | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம்..!

  • Jul 3, 2026 - 09:29 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03.07.2026) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]

kattankudy hizriya student honouring | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு. காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு..!

  • Jul 3, 2026 - 09:26 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு நேற்று வியாழக்கிழமை 02.07.2026 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் யூ.எவ்.எம்.வாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் அல்ஹாஜ் ஏம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.செய்க் எம்.எம்.ஜவாட், மற்றும் காத்தான்குடி நகரசபை நகரபிதா அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய […]

dont feed subramani yogurt | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுப்பிரமணிக்கு யோகட் கொடுக்க வேண்டாம்! அழைய வேண்டாம் என்கிறது வனஜீவராசிகள் திணைக்களம் …

  • Jul 2, 2026 - 03:29 PM
  • 0 Comments

கதிர்காமம் பாதயாத்திரையில் செல்லும் சுப்பிரமணிக்கு( நாய்) யோகட் கொடுக்க வேண்டாம். அத்துடன் அதனை தூக்கி தடவி அழைய வேண்டாம் என்று வனஜீவராசிகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவிக்கையில்.. இதுவரை சுப்பிரமணிக்கு மூன்று இடங்களில் சோர்ந்து போய் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இறுதியாக விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நேற்றிரவு சென்றடைந்த பொழுது அங்கும் சுப்பிரமணி மிகவும் சோர்வடைய அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . இப்பொழுது உகந்த மலையை நோக்கி இறுதி […]

eastern land dispute | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் இனவாத திட்டத்தை நடைமுறைப் படுத்த அரசு முயற்சியா? பண்ணையாளர்களை 1570 ஏக்கருக்குள் முடக்கிவிட்டு விவசாய குடியேற்றத்தை செய்யப்போகிறதா அரசு! – செ. நிலாந்தன் தெரிவிப்பு!

  • Jul 2, 2026 - 03:23 PM
  • 0 Comments

மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத விவசாய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் உருவாகி உள்ள முறுகல் […]

no emergency law extension | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை..!

  • Jul 2, 2026 - 12:03 PM
  • 0 Comments

டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் முடிவுக்கு வருகின்றன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அரசாங்க ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட […]

palaly resettlement organization | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ உதயம்..!

  • Jul 2, 2026 - 12:00 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக பலாலி, மயிலிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் போன்ற பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. […]

monk group joins land protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணி விடுவிப்பு போராட்டத்தில் பிக்கு தலைமையிலான குழு ஒன்றும் இணைந்தது..!

  • Jul 2, 2026 - 11:56 AM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்றைய தினம் எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றது. இந் நிலையில் பௌத்த மதகுரு தலைமையிலான சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp