உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..!

  • Apr 10, 2026 - 09:40 AM
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (10.04.2026) பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இரண்டாவது நாட்களாக தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

  • Apr 10, 2026 - 09:37 AM
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10.04.2026) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காணவில்லை..!

  • Apr 9, 2026 - 12:04 PM
  • 0 Comments

மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் என்ற தர்சா வயது 22 , நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை. குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே உறவுகளே குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் . 0763796686 ,

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பூர்ணா நர்த்தனாலயம் நடத்தும் நிருத்திய நாட்டிய சங்கமம் நிகழ்வு..!

  • Apr 9, 2026 - 11:27 AM
  • 0 Comments

பூர்ணா நர்த்தனாலயம் நடத்தும் நிருத்திய நாட்டிய சங்கமம் நிகழ்வு எதிர்வரும் 11.04.2026 சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தென்மராட்சிக் கல்வி வலய அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி விஜித்தா சுனில் ஆரியரத்னவின் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும் இனிய விருந்தினராக கலைக்குரிசில் நடனக்கலைஞர் திருமதி நாட்டியக்கலாமணி நல்லினி சிவராமும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..!

  • Apr 9, 2026 - 11:04 AM
  • 0 Comments

09.04.2026 மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார். கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்..!

  • Apr 9, 2026 - 10:16 AM
  • 0 Comments

வடக்கு தொடரூந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று(09.04.2026) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நாட்டைத் தாக்கிய “டித்வா” புயல் காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அன்பளிப்பு வாங்கும் பொலிசாருக்கு இனி ஆப்பு: பொலிஸ் நிலையங்களுக்கு பறந்த உத்தரவு..!

  • Apr 9, 2026 - 10:11 AM
  • 0 Comments

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு உபசரிப்புகளை நடத்துவதற்காக உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் புத்தாண்டு விருந்துகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்..!

  • Apr 9, 2026 - 10:07 AM
  • 0 Comments

வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சகோதரன் நேற்றைய தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தர்க்கப்பட்டு , சகோதரி மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர், சம்பவம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 9, 2026 - 10:01 AM
  • 0 Comments

09.04.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் தடை குறித்த அறிவிப்பு..!

  • Apr 9, 2026 - 09:58 AM
  • 0 Comments

நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08.04.2026) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp