ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா..!
28.06.2026
வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றர் சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுரேந்திரன் அவர்களின் […]
இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29.06.2026). மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய போன்றதொரு பௌர்ணமி தினத்திலாகும் என்பதுடன், அன்றிலிருந்து இந்த நாட்டில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டது. அநுராதபுரம் மிஹிந்தலை குன்றுக்கு வருகை தந்த மிஹிந்த தேரர், அப்போது இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதிஸ்ஸ மன்னன் உள்ளிட்ட குழுவினருக்கு பௌத்த மதம் போதிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் இலங்கையில் பௌத்த தர்மத்தை ஸ்தாபித்ததை அடுத்து […]
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இனிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. போட்டியின் நான்காம் நாளான (28) நேற்று தமது இரண்டாம் இனிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸ் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி அதன் முதலாம் இனிங்ஸில் […]
பௌத்த மதத்துடன் கிடைத்த, நாகரீகமான சமூகத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் பலமாக ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்தது இன்று போன்றதொரு பொசன் பௌர்ணமி தினத்திலேயாகும். தேரவாத பௌத்த தத்துவத்தினதும் […]
யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவன், அஜந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வியான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த உலக சாதனையை நிலைநாட்டினார். குறித்த நிகழ்வு நேற்று(28.06.2026) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி குறித்த சிறுமி உலக […]
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தை விடவும் இம்முறை முடிந்தளவில் சிரமங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கூறினார். அதேநேரம், ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு […]
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் , சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் […]
மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து மாத்தறை – தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை […]
கண்டி மாநகர சபைக்கு முன்னால் வாகனத்தின் உதிரிபாகங்களைப் பிரித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன் பிடிபட்டு, கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர் ஏற்கனவே இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2296938411045005