உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு வந்தாறுமூலையில் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

  • May 18, 2026 - 10:23 AM
  • 0 Comments

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18.05.2026) மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடிச்சந்தியில் வந்தாறுமூலை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன் போது பொதுச்சுடர், விளக்குகள் ஏற்றப்பட்டும் அகவணக்கம் செலுத்தியும் இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்கள் உணர்வுபூர்வமாக மலர்தூவி நினைவுகூரப்பட்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்முகபிள்ளையார் ஆலய பிரதமகுரு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் கைது செய்யப்படுவாரா ராமநாதன் அர்ச்சுனா..! அதிர்ச்சி குற்றச்சாட்டு

  • May 18, 2026 - 09:34 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வந்திறங்கும் போது தாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரை குறித்து பேசுவது தேசத்துரோகமாக கருதப்படக்கூடும் என்பதால், தமது கருத்துகள் காரணமாக தமது குரல் நிரந்தரமாக […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சந்தையில் உயரும் எண்ணெய் விலை..!

  • May 18, 2026 - 09:17 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18.05.2026) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஐக்கிய […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 18, 2026 - 09:09 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18.05.2026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுர […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

  • May 15, 2026 - 05:14 PM
  • 0 Comments

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசபைப் பிரதித் தவிசாளர் கயசீலன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போரதீவுப் பற்றுப் பிரதேச நிருவாகிகள், உறுப்பினர்கள் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாள் தாயக செயலணியின் ஏற்பாட்டில் கிரானில் அனுஸ்டிப்பு..

  • May 15, 2026 - 05:06 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ம் ஆண்டு நிறைவை அனுஸ்டிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாளான இன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் முன்னெடுக்கப்பட்டது. தாயக செயலணியின் கிரான் பிரதேச இணைப்பாளர் அரவிந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுதாகரன், தாயக செயலணியின் இணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட மதகுரு, பிரதேச சபை […]

ஈழம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குமுதினிப் படுகொலை நினைவுநாள்..!

  • May 15, 2026 - 04:00 PM
  • 0 Comments

15.05.1985 யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்..!

  • May 15, 2026 - 02:30 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15.05.2026) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இடமாற்றச் சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த !தயார்..

  • May 15, 2026 - 01:40 PM
  • 0 Comments

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தரவே முடியாது – பெரமுனா திட்டவட்டம்..!

  • May 15, 2026 - 01:09 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு […]