weerawansa case delay | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விமல்வீரவங்சவின் வழக்கு ஒத்திவைப்பு..!

  • May 18, 2026 - 01:42 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18.05.2026) உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம […]

nandikadal tribute | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி..!

  • May 18, 2026 - 11:28 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார். […]

jaffna swimming pool death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

  • May 18, 2026 - 11:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(17.05.2026) ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான் புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

tamil area shooting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் துப்பாக்கி சூடு..!

  • May 18, 2026 - 11:12 AM
  • 0 Comments

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17.05.2026) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்ட போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். இதன்போது, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

vandarumoolai mullivaikkal remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு வந்தாறுமூலையில் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

  • May 18, 2026 - 10:23 AM
  • 0 Comments

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18.05.2026) மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடிச்சந்தியில் வந்தாறுமூலை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன் போது பொதுச்சுடர், விளக்குகள் ஏற்றப்பட்டும் அகவணக்கம் செலுத்தியும் இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்கள் உணர்வுபூர்வமாக மலர்தூவி நினைவுகூரப்பட்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்முகபிள்ளையார் ஆலய பிரதமகுரு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் […]

archchuna arrest claim | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் கைது செய்யப்படுவாரா ராமநாதன் அர்ச்சுனா..! அதிர்ச்சி குற்றச்சாட்டு

  • May 18, 2026 - 09:34 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வந்திறங்கும் போது தாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரை குறித்து பேசுவது தேசத்துரோகமாக கருதப்படக்கூடும் என்பதால், தமது கருத்துகள் காரணமாக தமது குரல் நிரந்தரமாக […]

oil price increase | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சந்தையில் உயரும் எண்ணெய் விலை..!

  • May 18, 2026 - 09:17 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18.05.2026) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஐக்கிய […]

sl weather today 15 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 18, 2026 - 09:09 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18.05.2026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுர […]

vellaveli mullivaikkal event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

  • May 15, 2026 - 05:14 PM
  • 0 Comments

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசபைப் பிரதித் தவிசாளர் கயசீலன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போரதீவுப் பற்றுப் பிரதேச நிருவாகிகள், உறுப்பினர்கள் […]

gran mullivaikkal kanji week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாள் தாயக செயலணியின் ஏற்பாட்டில் கிரானில் அனுஸ்டிப்பு..

  • May 15, 2026 - 05:06 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ம் ஆண்டு நிறைவை அனுஸ்டிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாளான இன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் முன்னெடுக்கப்பட்டது. தாயக செயலணியின் கிரான் பிரதேச இணைப்பாளர் அரவிந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுதாகரன், தாயக செயலணியின் இணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட மதகுரு, பிரதேச சபை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp