யாழில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவு..!
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், பயிற்சிப் பட்டறை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நடைபெற்றது. பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக […]









