உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை ஒத்திவைப்பு..!

  • Mar 27, 2026 - 10:34 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26.03.2026) மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களம் மீண்டும் முடக்கப்படுமா..??

  • Mar 27, 2026 - 10:03 AM
  • 0 Comments

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முறிவு காரணமாக, அதன் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் 1:30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (27.03.2026) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகளும் இயங்காது. இதில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு..!

  • Mar 26, 2026 - 02:32 PM
  • 0 Comments

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சி அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையில் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்..!

  • Mar 26, 2026 - 02:28 PM
  • 0 Comments

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது இன்று(26.03.2026) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது தவிசாளரினால் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் நினைவு கூறப்பட்டதுடன் அவர் நிந்தவூர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி மண்முனை பற்று தவிசாளருக்கு எதிராக வர்த்தகர்கள் எதிர்ப்பு போராட்டம்..!

  • Mar 26, 2026 - 01:46 PM
  • 0 Comments

அடிப்படை வசதியின்மையை கண்டித்து 36 ஆண்டுகளுக்கு மேலாக மலசல கூடம் அற்ற நிலையில் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகள் போதிய அளவு இடம் இல்லாத நிலையில் இடவசதி இன்மையால் பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என கூறி வர்த்தக சங்கத்தினரால் இன்று (26.03.2026) காலை பாரிய எதிர்ப்பு போராட்டம் மண்முனை பற்று பிரதேச சபை முன்பாக முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி நகரசபைத் தவிசாளரின் வேண்டுகோள்..!

  • Mar 26, 2026 - 01:31 PM
  • 0 Comments

இக்கட்டான நிலைமையில் மக்கள் சமுகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; உலக நாடுகள் அனைத்தும் தற்போது நிலவி வருகின்ற யுத்த நிலைமை காரணமாக பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் சிக்கியுள்ளன.அதற்கு எமது நாடு விதிவிலக்கல்ல. இலங்கை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கோரி வருகின்றது. தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற்கொண்டு சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான கலந்துரையாடல் ..!

  • Mar 26, 2026 - 12:17 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம்(26.03.2026) யாழ் பொஸ்ட் விடுதியில் இடம் பெற்றது இவ் விசேட கலந்துரையாடலானது காலை 10 :30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது மற்றும் இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சம கால அரசியல் நிலைப்பாடுகள் ,எதிர் கால அரசியல் நகர்வுகள் , சம கால அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாட பட்டது. […]

ஈழம் செய்திகள் புதியவை

இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல..!

  • Mar 26, 2026 - 11:12 AM
  • 0 Comments

இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான “சிங்கள தேசம்” என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு ஆதிக் குடியாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் திகழும் தமிழைப் போன்று சிங்களம் ஒரு தூய மொழி அல்ல. மொழியியல் ரீதியாகப் பார்க்கும்போது, சிங்களம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

  • Mar 26, 2026 - 10:57 AM
  • 0 Comments

இலங்கையின் பல பாகங்களில் இன்று (26.03.2026) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் ஈரப்பதம் மற்றும் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது. சாதாரண வெப்பநிலையை விடவும் நமது உடல் உண்மையாக உணரக்கூடிய வெப்பத்தையே இது குறிக்கின்றது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை..!

  • Mar 26, 2026 - 10:19 AM
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு, எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை என அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன். இப்போது பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்க […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp