உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில். உள்ள அரச காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை..!

  • Apr 8, 2026 - 02:49 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு கோரிய சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே சில காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகையில் காணி வழங்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்..!

  • Apr 8, 2026 - 02:29 PM
  • 0 Comments

சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் அவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு வரவேற்கப்பட்டார். அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு..!

  • Apr 8, 2026 - 01:42 PM
  • 0 Comments

தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை  அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது மதிக்கத்தக்க அபூபக்கர் சபீனா […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மறைந்த ஊடகவியலாளர் ஏ. எல். எம். சலீம் நினைவாக நிந்தவூரில் வீதிக்கு பெயரிட கோரிக்கை..!

  • Apr 8, 2026 - 01:33 PM
  • 0 Comments

மறைந்த சிறந்த ஊடகவியலாளர் “கலாபூசணம்” ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவாக நிந்தவூரில் ஒரு வீதிக்கு அவரது பெயரை சூட்டுமாறு கோரி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. இம்மகஜர் மூலம், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கிய ஏ.எல்.எம். சலீம் அவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரின் பெயரை நிலைநிறுத்துவது அவசியம் என சங்கத்தினர் வலியுறுத்தினர். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செஞ்சிலுவை சங்கத்தினரின் விசேட சிரமதான நடவடிக்கை..!

  • Apr 8, 2026 - 01:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செஞ்சிலுவை சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு கடற்கரை பகுதி முழுவதும் விசேட சிரமதானம் மேற் கொள்ள பட்டது இவ் சிரமதானத்தின் போது கடற்கரை பகுதி முழுவதும் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் கழிவுகள் அகற்றப்பட்டது மற்றும் இவ் சிரமதான நடவடிக்கையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினரின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் மணற்காட்டு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிருபர் பூ.லின்ரன்

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: சித்திரை 10 இல் ஆரம்பம்..!

  • Apr 8, 2026 - 09:43 AM
  • 0 Comments

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை, பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சித்திரை 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்..!

  • Apr 7, 2026 - 05:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி இருவர் சாவு..!

  • Apr 7, 2026 - 10:05 AM
  • 0 Comments

பொல்கஹவெல, பங்களாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி இருவர் சாவடைந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயிர் நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஓட்டிசம்(AUTISM) சம்மந்தமாக அவதானமாக இருங்கள்..!

  • Apr 6, 2026 - 12:29 PM
  • 0 Comments

கீதாஞ்சலி சத்தியதாஸ் குழந்தை வைத்திய நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை “JSAC நிறுவனத்தின் உட்படுத்தல் கல்வியை நோக்கிய செயற்பாடுகளின் ஒரு பாகமாக ஓட்டிசம் நோய் தொடர்பான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இக்கட்டுரையானது பிரசுரிக்கப்படுகிறது.” ஓட்டிசம் என்பது குழந்தைகளின் விருத்தியில் ஏற்படும் ஒரு பின்னடைவு ஆகும்.சமூக நடத்தை மற்றும் தொடர்பாடலில் ஏற்படும் ஒரு பின்னடைவு இந்நோயின் சிறப்பியல்பு ஆகும். இக்குறைபாடு பிறப்பிலேயே உருவாகின்றது. எனினும் பிள்ளை வளரும் போதே குணக்குறிகள் வெளியே புலப்பட ஆரம்பிக்கும். இதனை முற்கூட்டியே […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக சாலையில் விபத்து – ஒருவர் பலி..!

  • Apr 6, 2026 - 10:09 AM
  • 0 Comments

தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (06.04.2026) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்தார். தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.