உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான கலந்துரையாடல் ..!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம்(26.03.2026) யாழ் பொஸ்ட் விடுதியில் இடம் பெற்றது

இவ் விசேட கலந்துரையாடலானது காலை 10 :30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்றது

மற்றும் இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சம கால அரசியல் நிலைப்பாடுகள் ,எதிர் கால அரசியல் நகர்வுகள் , சம கால அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாட பட்டது.

இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ,சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்