உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்..!

  • Mar 31, 2026 - 09:35 AM
  • 0 Comments

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது. இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று இலங்கை வரவுள்ள ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர்..!

  • Mar 31, 2026 - 09:32 AM
  • 0 Comments

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ இன்று (31.03.2026) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், இதன்போது இலங்கைக்கு கச்சா […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் கமல் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்..!

  • Mar 30, 2026 - 12:20 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (30.03.2026) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட கெப் வாகனம் ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது. பின்னர் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றது. சட்டவிரோதமாக வாகனத்தைப் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்ட ஐ.நா பிரதிநிதி..!

  • Mar 27, 2026 - 10:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் வீர வீராங்கனைகள் எதிர்நோக்கு சவால்கள் , பிரச்சனைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 27, 2026 - 09:21 AM
  • 0 Comments

27.03.2026 சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி விற்பனை கூடம்..!

  • Mar 26, 2026 - 12:27 PM
  • 0 Comments

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவகுமாரி அவர்களின் ஏற்பாட்டில் இன்று (26.03.2026) இடம் பெற்றது. இக்கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் விற்பனை கண்காட்சியை பார்வையிட வந்ததுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொருட்களையும் ஆர்வத்துடன் கொள்வனவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றம் வேண்டாம்..!

  • Mar 26, 2026 - 12:14 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(26.03.2026) சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்ட சில ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடுகள் செய்துள்ளனர். இதனால் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாசத்தை வென்ற தேசப்பற்று..!

  • Mar 26, 2026 - 11:09 AM
  • 0 Comments

நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், என்னை மாதிரியே அவனும் இருப்பான். நாங்கள் நான்கு பெடியன்கள், இரண்டு தங்கைகள். என்னுடைய மூத்த அண்ணன் எம் மண்ணில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்த நேரம் எங்கோ காணாமல் போய் விட்டான். ஏதோவொரு காட்டில் இராணுவத்தினரால் அவன் கொல்லப்பட்டிருக்கலாம். அதன் பின் நானும் எனது மற்ற அண்ணனும் இயக்கத்திற்கு சென்று விட்டோம், அப்போது தம்பிதான் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத அதிபர், ஆசிரியர்களுக்கு விசாரணை..!

  • Mar 26, 2026 - 11:04 AM
  • 0 Comments

கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்காலை நகர மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பாக தங்காலை வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்பியுள்ளார். குறித்த கூட்டத்திற்கு ஆசிரியர்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!

  • Mar 26, 2026 - 10:23 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பொலிஸார் மேற்கொண்ட வ விசேட நடவடிக்கையின் போதே , ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து 57 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.