உள்ளூர் செய்திகள்

சீனா 1888 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கின்றது

  • Nov 23, 2024 - 08:14 AM
  • 0 Comments

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் கீழ் வறிய குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும் 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது அதற்கான ஒப்பந்தம் நேற்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி […]

உள்ளூர் செய்திகள்

மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்

  • Nov 23, 2024 - 12:48 AM
  • 0 Comments

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]

செய்திகள்

பாதாள உலகத் தமிழ் தலைவரான தமிழ் இளைஞர் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

  • Nov 21, 2024 - 12:36 PM
  • 0 Comments

பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டிருந்தது வடமராட்சியை சேர்ந்த சந்தேகநபர், பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என […]

செய்திகள்

தமிழர்களை மையம் கொள்ளும் சீனா.

  • Nov 21, 2024 - 12:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த சீனத் தூதுவர் பல்வேறு தரப்பினரோடு உரையாடியதுடன் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திச் சென்றார் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய […]

செய்திகள்

வடக்கு விஜயத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை – சீன தூதுவர்

  • Nov 21, 2024 - 10:44 AM
  • 0 Comments

வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை’ என்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பொன்று நடைப்பெற்றது அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாhர் இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர், பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது […]

செய்திகள்

ஊழலுக்கு எதிராக அரசு போராடும் என சர்வதேச நாணயநிதியதிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

  • Nov 18, 2024 - 08:39 PM
  • 0 Comments

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் மனநிலையினை சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உழைக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியம் அதற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என உறுதியளித்த அவர் சிறுவர் வறுமை,போசாக்கின்மை போன்றவற்றிற்கு […]

செய்திகள்

ஜனாதிபதி அநுர தமிழ் மக்களை ஏமாற்ற மாட்டார்- சந்திரசேகரன்

  • Nov 17, 2024 - 10:22 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நிட்சம் நிறைவேற்றப்படும் தேசிய மக்கள் சக்தி, வடகிழக்கில் பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கு வெற்றி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணிலும் ; சஜித்தும் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆகவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் […]

செய்திகள்

தேர்தல்கள் சட்டத்துக்கும் பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜதுரை ஹஷான்

  • Nov 13, 2024 - 04:51 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் 1;3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும் பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள் பொது இடங்களில்  சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுங்கள். தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் பொலிஸ்மா அதிபரும் […]

செய்திகள்

கொழும்பில் சர்வதேச பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • Nov 13, 2024 - 02:10 PM
  • 0 Comments

  ஜூலை 2ம் திகதி ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து இரண்டு மாணவர்கள் விழுந்து தற்கொலை செய்தார் என தகவல் தெரிவித்த போதிலும் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான ஜிவொன் ஜொரொ சிங்கின் பெற்றோர் அதனை நிராகரித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் பல தவறாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது  ஏனையவர்களிற்கு உதவும் ஜிவோன் எனும் மாணவனின் மனோபாவமே  தொடர்மாடியியிலிருந்து விழுந்து அவர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்தது. அன்றைய தினம் தனது உதவி தேவையாகயிருந்த ஒருவருக்கு ஜிவோன் உதவி […]

ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) 'இளம் கலைஞர்' விருதுக்கு தெரிவு! உள்ளூர் செய்திகள்

ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) ‘இளம் கலைஞர்’ விருதுக்கு தெரிவு!

  • Nov 12, 2024 - 02:57 AM
  • 0 Comments

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் ‘இளம் கலைஞர்’ விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாதம் இறுதி பகுதியில் திருகோணமலையில் குறித்த விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கவேல் சுமன் சிறு வயது முதல் தற்போது வரை கூத்துக்கலையில் சிறப்பாக ஈடுபட்டுவருவதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சொந்த […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp