செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 30, 2026 - 09:22 AM
  • 0 Comments

30.03.2026 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொலையாளிகளுக்கு துணைபோகாதீர்கள்..!

  • Mar 27, 2026 - 11:33 AM
  • 0 Comments

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (27.03.2026) இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம். கடந்த (20.03.2026) மட்டக்களப்பு படுவான்கரைபெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசமான நெல்லிக்காடு வயல் வெளி பாழடைந்த கிணற்றில் கொலைவெறி கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட 40, ம் கிராமத்து தாய்க்கு நீதிவேண்டியும், கொத்தியாபுல பெண்ணை அதே கிணற்றில் கொலைகாற கும்பல் வீசியது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றில் வாதிடவேண்டாம் எனவும், இனிமேலும் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் கவன ஈர்ப்பு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக அலங்கார தாவரங்களை கடத்தியவர் கைது..!

  • Mar 27, 2026 - 11:01 AM
  • 0 Comments

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று (27.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியைச் சேர்ந்த 57 வயதுடைய இந்தச் சந்தேகநபர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்த அலங்காரத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற பவளப்பாறை பாதுகாப்பை மையப்படுத்திய ஒன்றுகூடல்..!

  • Mar 27, 2026 - 10:41 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் பவளப்பாறை பாதுகாப்பை மையப்படுத்திய “இலங்கை பவளப்பாறை முன்முயற்சி” (Sri Lanka Coral Reef Initiative) திட்டத்தின் கீழ் விசேட கலந்துரையாடல் நேற்று (26.03.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டெர்னி குமார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை ஒத்திவைப்பு..!

  • Mar 27, 2026 - 10:34 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26.03.2026) மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிசார்..!

  • Mar 27, 2026 - 10:15 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27.03.2026) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்ட ஐ.நா பிரதிநிதி..!

  • Mar 27, 2026 - 10:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் வீர வீராங்கனைகள் எதிர்நோக்கு சவால்கள் , பிரச்சனைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களம் மீண்டும் முடக்கப்படுமா..??

  • Mar 27, 2026 - 10:03 AM
  • 0 Comments

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முறிவு காரணமாக, அதன் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் 1:30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (27.03.2026) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகளும் இயங்காது. இதில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதை அமெரிக்கா நீட்டிக்கும்..!

  • Mar 27, 2026 - 09:42 AM
  • 0 Comments

மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6 வரை அமெரிக்கா இடைநிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகவும் டிரம்ப் எழுதியிருந்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல தெஹ்ரான் அனுமதிக்காவிட்டால், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

  • Mar 27, 2026 - 09:24 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர், 4,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது நேற்று (26.03.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்து அவரது தாய் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ‘119’ அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp