24hr water cut | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று குறித்த பிரதேசங்களில் 24 மணித்தியால நீர்வெட்டு..!

  • Jun 24, 2026 - 09:37 AM
  • 0 Comments

பாதுக்க, ஹோமாகம, கொட்டாவை, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளுக்கு இன்று (24.06.2026) 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை (25.06.2026) இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, மஹரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

sri lanka weather today 4 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Jun 24, 2026 - 09:28 AM
  • 0 Comments

24.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் […]

parliament chaos sitting postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்றில் அமைதியின்மை – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..!

  • Jun 23, 2026 - 12:40 PM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர். அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் வினவியபோது, அதற்கு இணங்க முடியாது எனவும், தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதனை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் […]

opposition demands emergency parliament debate | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அவசர பாராளுமன்ற விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்..!

  • Jun 23, 2026 - 12:35 PM
  • 0 Comments

அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று இன்று (23.06.2026) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. நீதித்துறைத் துறையில் எழுந்துள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்குவதற்கு பாராளுமன்றம் தலையிட வேண்டும் எனச் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

no plan to repeal pta says government | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசிற்கு இல்லை..!

  • Jun 23, 2026 - 12:32 PM
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதற்குத் தேவைப்படின், தான் அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நேற்று (22) இரவு டிவி தெரணவில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதை பாராளுமன்றத்தில் […]

2026 housing project progress review meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

2026 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்..!

  • Jun 23, 2026 - 12:29 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (23.06.2026) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஜயசுந்தர அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார். வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் 2009ஆம் ஆண்டுக்கு […]

long queues in jaffna heat | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!

  • Jun 23, 2026 - 11:27 AM
  • 0 Comments

இம் மாதம்-30 ஆம் திகதிக்குப் பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இன்றைய தினமும் (23.06.2026) சற்றுமுன் நீண்ட வரிசையை அவதானிக்க முடிகிறது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/819508494429231

special crime investigation officer arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது..!

  • Jun 23, 2026 - 11:10 AM
  • 0 Comments

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றவியல் விசாரணை பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசேட குற்றவியல் விசாரணை பிரிவினர் விசாரணையொன்றை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணைக்கு அமைவாக, நீதிமன்றத்தில் […]

high court upholds gnanasara prison sentence | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஞானசாரவின் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது..!

  • Jun 23, 2026 - 11:08 AM
  • 0 Comments

ஞானசார தேரர் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது பொது பல சேனா அமைப்பின் செயலாளர் பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (23.06.2026) உறுதிப்படுத்தியது. அந்த சிறைத் தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்த தீர்ப்பை வழங்கினார். இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் […]

jaffna army farm on private land | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மக்களின் காணிக்குள் இராணுவத்தினரின் பாரிய விவசாய பண்ணை..!

  • Jun 23, 2026 - 10:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில்,, தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், குரும்பசிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp