யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்..!
யாழ்ப்பாண மாவட்டத்தின் இயற்கை, பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சுற்றுலா வளங்களை மேலும் மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தலைமையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக […]









