கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்காவிடின் வடக்கு ஆளுநர் அலுவலகம் முற்றுகையிடப்படும்..!
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக இன்றையதினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும், 3 குடும்பங்களுக்குரிய 11.5 ஏக்கர் தோட்டக்காணிகளுமாக 171 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் பூர்வீக வாழ்விடமாக கொண்ட 55.5 ஏக்கர் காணியை முதற்கட்டமாக உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தே […]









