சீருடை சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துங்கள்! கல்முனையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது . கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) திங்கள் கிழமை காலை அரைமணி நேரம் அங்குள்ள சுகாதார உதவியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் “சுகாதார அமைச்சின் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்று நிருபத்தை சாதி இன மத பேதமின்றி சகலருக்கும் பொதுவாக முறையாக அமல்படுத்துங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவரவர் கலாச்சார உடை […]









