நல்லை ஆதீன தலைமைப்பீட வெற்றிடத்திற்கு பொருத்தமான ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்..!ந.சச்சிதானந்தன் வலியுறுத்தல்
நல்லையாதீன தலைமைப்பீடம் ஒரு வருட காலத்திற்கு மேலாக வெற்றிடமாக உள்ள நிலையில் அதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென நல்லையாதீன கட்டிடக்குழுச் செயலாளர் நடராசா சச்சிதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்; நல்லை ஆதீன குரு முதல்வராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறைபதமடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.இவ்வெற்றிடத்திற்கு இந்து சமய பேரவைத் தலைவர் திரு.சி.சக்திகிரீவன் தகுந்தவர் என்று சைவப்பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லை ஆதீனத்திற்கு யார் […]









