சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்கு ஊறுவிளைவித்து அபிவிருத்தியை அடையமுடியாது..!
முதலீடுகளையும் கைத்தொழில்துறை வளர்ச்சியையும் நாம் மனதார வரவேற்கின்றோம், ஆனால், சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்கு ஊறுவிளைவித்து எந்தவொரு அபிவிருத்தியையும் நாம் நிலைத்து நிற்கும்படி அடைய முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதி நடைமுறைகள் தொடர்பான விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை சுற்றாடல் தொழில் வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் மனேஜ்மன்ட் க்ளப் ஆகியவை […]









