கனடா செய்திகள்

ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • Dec 18, 2024 - 01:53 AM
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். கடந்த நவம்பர் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ரொறன்ரோவில் சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர் தொழில் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.   இதையும் படியுங்கள்>கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார். https://studio.youtube.com/channel/UCH1DavrHcT165zBxt3eG7Tg/videos/short?filter=%5B%5D&sort=%7B%22columnType%22%3A%22date%22%2C%22sortOrder%22%3A%22DESCENDING%22%7D

உள்ளூர்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை

  • Dec 16, 2024 - 04:52 PM
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்; அருச்சுனாவுக்கும் சட்டத்தரணி என். கௌசல்யாக்கும் (தங்கம்) தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

உள்ளூர் செய்திகள்

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவை- கஜேந்திரகுமார்

  • Dec 15, 2024 - 01:46 AM
  • 0 Comments

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவையுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார் வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று […]

செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி

  • Dec 14, 2024 - 07:40 PM
  • 0 Comments

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் ஆரும்பமாக இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு….! (காணொளி)

  • Dec 14, 2024 - 12:44 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=DbQa20cTiGA

செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார்

  • Dec 13, 2024 - 07:42 PM
  • 0 Comments

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். தற்போதைய சபாநாயகர் அசோக ரன்வல கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்ட போதும் தன்னை கலாநிதி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார். ஆனால் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பி.எஸ்.சி. பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் […]

செய்திகள்

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

  • Dec 13, 2024 - 07:35 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட பட்டதாரிகளினால் கவலை […]

உலகம்

ஒன்றாரியோ மாகாண மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

  • Dec 13, 2024 - 07:22 PM
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சில பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் ஒன்றாரியோவின் பல இடங்களில் சுமார் 60 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும், 100 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருப்பது மிகவும் உசிதமானது என […]

உள்ளூர்

தமிழர் தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட் வேண்டும் வன்னி எம்;.பி.ப.சத்தியலிங்கம்

  • Dec 12, 2024 - 07:31 PM
  • 0 Comments

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும். இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய […]

உலகம்

ரொறன்ரோவில் நீர் விநியோக கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது

  • Dec 12, 2024 - 07:26 PM
  • 0 Comments

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு கட்டண அதிகரிப்பு விதிக்கப்பட உள்ளது. நீர் மற்றும் கழிவு நீர் என்பனவற்றிற்காக கட்டணங்களை 3.7 வீதத்தினால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்த கட்டண அதிகரிப்பு மூலம் சுமார் 53 மில்லியன் டொலர்களை மேல் அதிகமாக ஈட்ட முடியும் […]