e0aeaae0aebee0aea4e0af81e0ae95e0aebee0aeaae0af8de0aeaae0af81e0aeaae0af8d e0aeaae0ae9fe0af88e0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aeaae0aebf | Pathivu News செய்திகள்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஓய்வு பெறுகிறார்

  • Dec 29, 2024 - 10:00 PM
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார். இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார். சவேந்திர சில்வா இலங்கையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார். 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார். பின்னர் 2019 […]

e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebee0aeb5e0af88 e0ae85e0aeaee0af88e0aea4e0aebfe0ae95e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aeaee0aebe | Pathivu News செய்திகள்

இந்தியாவை அமைதிகாக்குமாறு கஜேந்திரகுமார் எம்பி கோரிக்கை

  • Dec 27, 2024 - 10:19 PM
  • 0 Comments

13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக […]

e0aeaee0ae95e0aebfe0aea8e0af8de0aea4 e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae95 e0aeaee0aebee0aeb1e0af81e0aeaee0af8d e0ae85e0aea8e0af81e0aeb0 | Pathivu News செய்திகள்

மகிந்த அரசாக மாறும் அநுர அரசு

  • Dec 27, 2024 - 01:50 PM
  • 0 Comments

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்களை முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலோ அல்லது மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் முன்னாண் போராளிகள் தொடர்பில் எவ்வித அக்கரையும் அநுர […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0aeaee0aebee0aea3e0aeb5e0aea9e0af8d e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1e0aebee0aeb0e0af8d | Pathivu News விளையாட்டு

வவுனியா மாணவன் வென்றார் வெள்ளி பதக்கம்

  • Dec 26, 2024 - 10:26 AM
  • 0 Comments

இளையோருக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் வு.தரனிதரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் கடந்த 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இளையோருக்கான குத்துச்சண்டை போட்டி கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 மப எடைப்பிரிவில் போட்டியிட்ட தரனிதரன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0af81 e0ae95 | Pathivu News உள்ளூர்

கிளிநொச்சியில் விபத்து குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

  • Dec 25, 2024 - 10:14 PM
  • 0 Comments

கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலியான அதே வேளை குழந்தையின் தாய் தந்தை மற்றும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மது போதையில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி விப்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்  

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae9ae0aebfe0aeb1e0af88e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0aebfe0aeb0 | Pathivu News செய்திகள்

வவுனியா சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்

  • Dec 25, 2024 - 10:38 AM
  • 0 Comments

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று (25) விடுவிக்கப்பட்டனர்.

e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae9ae0af81e0aea9e0aebfe0aeb2e0af8d e0aeb9e0aea8e0af8de0aea4e0af81e0aea9e0af8de0aea8 | Pathivu News செய்திகள்

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு

  • Dec 25, 2024 - 10:30 AM
  • 0 Comments

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் நிதி மோசடி செய்வதாகத் தெரிவித்து அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் இந்த நிதி மோசடிகளை செய்துள்ளனர். […]

e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebee0ae9fe0af8de0ae9ae0aebf e0aeaae0aeb2e0aeaee0ae9fe0af88e0aea8e0af8de0aea4e0aebee0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

சட்டவாட்சி பலமடைந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- சிறிநேசன் எம்.பி

  • Dec 25, 2024 - 02:14 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள நிலையில் அதனை நடைமுறைபடுத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். […]

e0ae95e0aebfe0aeb0e0aebee0aeae e0ae89e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0af8be0ae95e0aea4e0af8de0aea4e0aeb0e0af88 e0aeaae0af8be0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

கிராம உத்தியோகத்தரை போட்டு பிடித்த வாழைச்சேனை மக்கள்

  • Dec 23, 2024 - 03:00 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் சிலரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லையென கோரியே அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  

e0ae85e0aeb0e0ae9a e0ae9ae0af87e0aeb5e0af88e0aeafe0af88 e0aeb5e0aebfe0aea9e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeb1e0aea9e0aebee0aea9e0aea4 | Pathivu News செய்திகள்

அரச சேவையை வினைத்திறனானதாக மாற்ற வேண்டும்-ஜனாதிபதி அநுரகுமார

  • Dec 20, 2024 - 05:32 PM
  • 0 Comments

எமது நாட்டின் அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கொழும்பில்; உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp