உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..!

  • Mar 25, 2026 - 11:59 AM
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் நாளை (26.04.2026) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் இடம்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்..!

  • Mar 24, 2026 - 12:33 PM
  • 0 Comments

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24.03.2026) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையே சரமாரி வாள்வெட்டு..!

  • Mar 24, 2026 - 12:15 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23.03.2026) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று(23.03.2026) இரவு 9.00 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள்..!

  • Mar 24, 2026 - 09:37 AM
  • 0 Comments

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24.03.2026) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தம்மிக மற்றும் அர்ஜுனவிற்கு குற்றப்பத்திரிகை..!

  • Mar 23, 2026 - 12:14 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு இன்று (23.03.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்தது. 2017 – 2018 காலப்பகுதியில், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வைக்கோல் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

  • Mar 23, 2026 - 12:10 PM
  • 0 Comments

வீரவில, கங்கசிறிகம பகுதியில் நபர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ள நிலையில், அந்தத் தீ அருகில் உள்ள ஏனைய வயல் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க முயன்றுள்ளார். அவர் தீயில் சிக்கிப் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா..!

  • Mar 23, 2026 - 09:51 AM
  • 0 Comments

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01.04.2026 புதன்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.46மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று தொடர்ந்து 45நாட்கள் மண்டலாபிஷேக பெருவிழாவும் இடம்பெறவுள்ளது. கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட கிரியாரம்ப நிகழ்வு 28/03 சனிக்கிழமை காலை 5மணி முதல் இடம்பெற்று 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மேற்படி கும்பாபிஷேக பெருவிழா சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்,சிவஸ்ரீ செ.பரமானந்தக்குருக்கள் ஆகியோரின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று..!

  • Mar 23, 2026 - 09:45 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23.03.2026) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பேருந்து […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 23, 2026 - 09:33 AM
  • 0 Comments

23.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு..!

  • Mar 20, 2026 - 10:44 AM
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார். நேற்று (19.03.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp