செய்திகள் முக்கிய செய்திகள்

சீனாவும் இலங்கையும் அம்பாந்தோட்டை சினாபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கவில்லை.

  • Jan 2, 2026 - 06:48 PM
  • 0 Comments

இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமான சைனோபெக் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டம் ஏற்கனவே ஒரு வருடம் கடந்தும், இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது. கடந்த 2025 ஜனவரியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் சீனா பயணத்தின் போது, சீனாவின் அரசு சார்பான எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமான சைனோபெக் நிறுவனத்துடன் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் அம்பாந்தோட்டை சர்வதேசத் துறைமுகம் அருகே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டத்துடன் […]

உள்ளூர் செய்திகள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ளாரா?

  • Oct 26, 2025 - 07:12 PM
  • 0 Comments

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா) படுகொலைக்கு தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பொலிஸாருடனான மோதலின் போது தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் இவர் மீது தேடுதல் வேட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வலது மேல் கையில் “Anuradha” என்றும் இடது கையில் “Hitumade Jeevithe” […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு துரத்தப்பட்டார் மகிந்த ராஜபக்ஸ

  • Sep 11, 2025 - 06:48 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை சிந்தித்து செலவீனம் செய்து வரிவிதிப்பூடாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்- உலகவங்கி

  • Sep 10, 2025 - 10:05 AM
  • 0 Comments

உலக வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில், இலங்கை அதிக சிந்தித்துப் பயன்படுத்தும் செலவீனம் மற்றும் நியாயமான வரிவிதிப்பு மூலம் தனது பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ‘Sri Lanka Public Finance Review: Towards a Balanced Fiscal Adjustment’ எனப் பெயரிட்ட அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில், உள்நாட்டு மொத்த உற்பத்தியின்(GDP) சுமார் 8 சதவீதம் அளவிலான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் மாக்ரோ பொருளாதார நிலைத்தன்மை மீட்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறது. […]

உள்ளூர் செய்திகள்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கை கோர் குழு’ இலங்கைக்கு அழுத்தம்.

  • Sep 10, 2025 - 09:32 AM
  • 0 Comments

இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில், மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை மையமாகக் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி பகுப்பாய்வுக்கு ஐ.சி.ஆர்.சி. க்கு நீதியமைச்சு அழைப்பு

  • Sep 7, 2025 - 03:47 PM
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது. இதன்படி, செஞ்சிலுவை சங்கம் விரைவில் பங்கேற்கும் என அறியமுடிகிறது. செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் […]

செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி பகுப்பாய்வுக்கு ஐ.சி.ஆர்.சி. க்கு நீதியமைச்சு அழைப்பு

  • Sep 7, 2025 - 03:37 PM
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது. இதன்படி, செஞ்சிலுவை சங்கம் விரைவில் பங்கேற்கும் என அறியமுடிகிறது. செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் […]

உள்ளூர் செய்திகள்

மட்டு களுவாஞ்சிக்குடியில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அகழ நீதிமன்றம் அனுமதி

  • Aug 26, 2025 - 07:00 AM
  • 0 Comments

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கே இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் யு.ஆ.ஆ. ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவ இடத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • Aug 21, 2025 - 09:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிதி மோசடியில் குற்றவாளியொருவர் அநுர அரசில் அமைச்சராய் இருப்பது பாரிய பிரச்சினை- புபுது ஜயகொட

  • Aug 19, 2025 - 08:24 AM
  • 0 Comments

நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18-08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து, அவர் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். 80 இலட்சம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp