உலகம்

பட்டினித் துயரில் நைஜீரியா 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

  • Dec 23, 2024 - 01:16 PM
  • 0 Comments

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் […]

உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

  • Dec 23, 2024 - 02:33 AM
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலியப் […]

இந்தியா செய்திகள்

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • Dec 23, 2024 - 02:26 AM
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • Dec 23, 2024 - 01:29 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

உலகம்

ஆப்கனை அதிகாலையில் உலுக்கியது நிலநடுக்கம்

  • Dec 22, 2024 - 09:56 AM
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

செய்திகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது

  • Dec 22, 2024 - 09:42 AM
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணம் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7மூ என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இதற்கிடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முறையே இரண்டாவது […]

செய்திகள்

பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர்

  • Dec 21, 2024 - 09:16 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு ; தெரிவித்தார். அத்துடன் கன்னங்கராவின் கல்விச் […]

செய்திகள்

நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

  • Dec 21, 2024 - 09:03 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடி . சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜுலி கோசெக் தெரிவித்துள்ளார் இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றக்குழு அதற்கான அனுமதியை வழங்கியவுடன், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் பல்வேறு வரி […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் பரவியுள்ள எலிக் காய்ச்சல் நோய் விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம்!

  • Dec 20, 2024 - 01:49 AM
  • 0 Comments

எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக  வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்நோயானது லெப்ற ரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பக்டீரியாக்கள் வாழும். எலியின் சிறுநீர் […]

கனடா செய்திகள்

மக்களின் கோபத்துக்குள்ளான கனடா பிரதமர்!

  • Dec 19, 2024 - 02:11 AM
  • 0 Comments

நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரான போது, நாடே அவரைக் கொண்டாடியது. ஆனால் இன்று, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய விடயங்கள், ட்ரூடோ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆளுங்கட்சி அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp