செய்திகள்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளான கபில, உதயங்கவுக்கு எதிராக அநுர அரசு நடவடிக்கை எடுக்குமா? அமெரிக்கா

  • Dec 13, 2024 - 07:56 AM
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகிய இருவருக்கும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…..! (காணொளி)

  • Dec 13, 2024 - 01:39 AM
  • 0 Comments

  தமிழர் தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட் வேண்டும் வன்னி எம்;.பி.ப.சத்தியலிங்கம் காசை சேர்க்கிற வழியை பாருங்கோ- அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் நாளை தீர்மானம்? சபாநாயகரின் கலாநிதி பட்டம் நிருபிக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரனை   https://youtu.be/YkgwkSfjkjo

செய்திகள்

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் நாளை தீர்மானம்?

  • Dec 12, 2024 - 07:54 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சோ.சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார். இருப்பினும் குறித்த காலப்பகுதி பாராளுமன்றத் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தமையால் மாவையின் கடிதம் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றே கட்சியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி மாவை […]

செய்திகள்

காசை சேர்க்கிற வழியை பாருங்கோ- அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

  • Dec 12, 2024 - 07:44 PM
  • 0 Comments

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு அறிவுறுத்தினார். நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த, சுயாதீன நிறுவனம் என்ற வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் நிதிச் செயற்பாடுகளை செயற்றிறன் மிக்கதாக்குவதற்கு நல்லதொரு பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புக்களின் […]

உள்ளூர்

தமிழர் தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட் வேண்டும் வன்னி எம்;.பி.ப.சத்தியலிங்கம்

  • Dec 12, 2024 - 07:31 PM
  • 0 Comments

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும். இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய […]

உலகம்

ரொறன்ரோவில் நீர் விநியோக கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது

  • Dec 12, 2024 - 07:26 PM
  • 0 Comments

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு கட்டண அதிகரிப்பு விதிக்கப்பட உள்ளது. நீர் மற்றும் கழிவு நீர் என்பனவற்றிற்காக கட்டணங்களை 3.7 வீதத்தினால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்த கட்டண அதிகரிப்பு மூலம் சுமார் 53 மில்லியன் டொலர்களை மேல் அதிகமாக ஈட்ட முடியும் […]

உலகம்

கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரிய தமிழர் உட்பட 21 பேர் கைது

  • Dec 12, 2024 - 07:23 PM
  • 0 Comments

பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த கப்பம் கோரல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மொத்தமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 154 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கப்பம் கோரல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. முகநூல் மற்றும் றாயவளயிp ஊடாக இந்த கப்பம் கோரல்கள் […]

செய்திகள்

சபாநாயகரின் கலாநிதி பட்டம் நிருபிக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரனை

  • Dec 12, 2024 - 08:40 AM
  • 0 Comments

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது சபாநாயகரோ விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். ‘அவர் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாநிதி பட்டம் பெற்றிருந்தால், […]

செய்திகள்

பேஸ்புக், வட்ஸ்அப் செயலிகள் மீள இயங்க ஆரம்பித்துள்ளது

  • Dec 12, 2024 - 08:08 AM
  • 0 Comments

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று (11) நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து தகவல் வெளியிட்ட யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

  • Dec 12, 2024 - 03:31 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp