மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஜனாதிபதியானதன் பின்னர் அதனை மறந்துவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை மீளப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வரப்பிரசாதங்களை […]









