சினிமா

வெறியான நடிகை சமந்தா

  • Jan 18, 2025 - 07:32 AM
  • 0 Comments

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடை குறைந்து ஒல்லியாகி இருந்தது இதனை பலரும் விமர்சனம் செய்திருந்தனர் இதனால் அவரது உடலைப் பற்றி பலரும் கேலி செய்தனர் இதனால் கடும் கோபமுற்ற அவர் அவ்வாறு செய்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்து இருந்தார். அதாவது அவர்  anti-inflammatory    டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும், மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு […]

முக்கிய செய்திகள்

மன்னார் இரட்டைக்கொலை சம்பவத்தின் சூத்திரதாரி வெளிநாட்டில் வசிக்கின்றார்

  • Jan 18, 2025 - 04:57 AM
  • 0 Comments

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண முதலாளிகள் அவர்களின் ஊழியர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என முறைப்பாடு

  • Jan 17, 2025 - 07:08 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர் ஊழியர் சேமலாப நிதியம் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள். குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

  • Jan 17, 2025 - 03:27 PM
  • 0 Comments

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் தொடரூந்து; சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளது

  • Jan 17, 2025 - 01:37 PM
  • 0 Comments

தொடரூந்து; இயந்திர சாரதிகளின் பற்றாக்குறையினால் இன்று வெள்ளிக்கிழமை (17) பல தொடரூந்து; சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும், 42 சாரதிகள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் தொடரூந்து; திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக 68 தொடரூந்து; இயந்திர சாரதிகள் தேவை. எனினும் தற்போது 42 பேர் மட்டுமே பணிக்கு உள்ளனர். இவர்களில் 27 பேர் சுகயீன விடுமுறையில் உள்ளதாகவும் மேலும் 12 பேர் இரண்டு சேவைகளில் தங்களை ஈடுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக தொடரூந்து; சேவைகள் திணைக்களம் […]

முக்கிய செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

  • Jan 17, 2025 - 12:42 PM
  • 0 Comments

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று பணியாளர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஸானி ரோஹணதீரவின் பரிந்துரைக்கு அமைய குறித்த மூன்று பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் ஒப்புதல் வழங்கினார். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

  • Jan 17, 2025 - 11:43 AM
  • 0 Comments

ரஸ்சியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17-01-2025) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உதயங்க வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து  சாரதி பலி 19 ரஸ்சியர்கள் காயம்

  • Jan 17, 2025 - 11:34 AM
  • 0 Comments

தெற்கு அதிவேக வீதியில் இன்று (17-01-2025) காலை ரஸ்சிய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன்; மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ள அதே வேளை சுமார் 19 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர். தங்காலை நோக்கிச் செல்லும் வீதியில் 138 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் அதிவேகமாக பயணித்த பேரூந்து பாரவூர்தியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் […]

முக்கிய செய்திகள்

வடக்கு மீனவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்- முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்

  • Jan 17, 2025 - 08:58 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டது : முன்னாள் எம்பி சுமந்திரன்

  • Jan 16, 2025 - 09:08 PM
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp