செய்திகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • Feb 27, 2025 - 10:53 AM
  • 0 Comments

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத உத்தியோகபூர்வமாக நேற்று (26-02-2025) கடமைகளைப் பொறுப்பேற்றார். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பிரிவில் பட்டம் பெற்ற இவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் கற்றுள்ளதுடன் பல தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

இந்தியா உலகம்

இந்தியா நம்மை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறது – அதிபர் டிரம்ப்

  • Feb 24, 2025 - 02:29 AM
  • 0 Comments

இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க வழங்கப்படும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. நாம் ஏன் நிதி தர வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் தேர்தல் முடிவை மாற்ற முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் இந்த நிதியை அறிவித்து ,இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த முயற்சி நடந்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ,ந்தியாவுக்கு […]

இந்தியா செய்திகள்

காவல் உதவி செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் வேண்டுகோள்

  • Feb 13, 2025 - 05:07 PM
  • 0 Comments

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு […]

சினிமா

ரஜினிக்க ஜோடியாக கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றாரா?

  • Feb 7, 2025 - 07:20 AM
  • 0 Comments

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘கூலி.’ சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற […]

செய்திகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு 14 ஏக்கர் காணியும சொந்தம் என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஜீ.ஏக்கு கடிதம்

  • Feb 6, 2025 - 06:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். குறித்த கூட்டத்திற்கு, […]

இந்தியா

18 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சிக்குட்படுத்தினால் இனி தமிழகத்தில் மரண தண்டனை

  • Jan 29, 2025 - 07:51 AM
  • 0 Comments

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை அடுத்து இன்று அரசிதழில் வெளியானது கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:- பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, […]

உலகம்

காங்கோ நாட்டின் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

  • Jan 29, 2025 - 07:35 AM
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் […]

இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

  • Jan 25, 2025 - 05:32 AM
  • 0 Comments

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அடுத்த மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 […]

செய்திகள்

பட்டபின்னும் திருந்தாத தமிழரசுக்கட்சி, மீண்டும் தமிழ் தேசியக்கட்சிகளிடையே முறுகல்

  • Jan 23, 2025 - 06:04 AM
  • 0 Comments

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. அதனையடுத்து , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் […]

உலகம்

சீனாவினதும் ரஸ்சியாவினதும் உறவுகளை வலுப்படுத்த ஜி ஜின்பிங் மற்றும் புட்டின் ஆலோசனை நடத்தியுள்ளனர்

  • Jan 22, 2025 - 07:38 PM
  • 0 Comments

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஸ்சியாவையும் கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார். 2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஸ்சிய ஜனாதிபதி புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஸ்சியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் […]