இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர்
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்த போது;. இதனைக் குறிப்பிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக இந்த நாட்டு அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்துள்ள பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவேன் எனவும், எதிர்காலத்திலும் அதனைத் தொடரப் போவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு கடந்த தேர்தலில் பெரும் ஆணை வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் காலப்பகுதி சவாலானதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். […]









