யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9க்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்பு செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளுக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் […]









