செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை-ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 09:28 AM
  • 0 Comments

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களின் இடமாற்றங்களை ஒழுங்கு கிரமமாக செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது. ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆனால் ஆணைக்குழு அதனை சரியாக செய்யவில்லையென தெரிவித்துள்ளது இந்த நாட்டை போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார் ;அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்? அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் […]

முக்கிய செய்திகள்

மேல் தட்டில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திலிருக்கும் மக்களுக்கு நகர்த்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • Jan 22, 2025 - 07:41 AM
  • 0 Comments

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுவான புழக்க முறையொன்றினை நிறுவுவதன் முக்கியத்துவம் […]

முக்கிய செய்திகள்

அரசு சொல்லும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் மகிந்த அரச வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் – அமைச்சர் நளிந்த

  • Jan 22, 2025 - 06:23 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதே உசிதமானது. அவருக்கு மாத்திரமின்றி ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது பொறுந்தும். விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், […]

முக்கிய செய்திகள்

கிளீன் சிறிலங்காவால் நாறுகின்றது பாராளுமன்றம்

  • Jan 22, 2025 - 06:06 AM
  • 0 Comments

தாஜுதீனையும் லசந்த விக்கிரமதுங்கவையும் கொலை செய்தது நாமல் இராஜபக்ஸ என அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நாமலுக்குமிடையில் இடையில் கடும் தொனிளிலான வாக்குவாதம் நடைப்பபெற்றது பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நாமல் ராஜபக்ஸ உரையாற்றும்போது தெரிவித்த விடயங்கள் தொடர்பிலே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபையில் […]

செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஆதரவளிக்கின்றது ஜேவிபி அரசாங்கம்

  • Jan 22, 2025 - 05:42 AM
  • 0 Comments

நாடாளுமன்ற ளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தம் வெளியிட்டுள்ள பிமல் ரத்நாயக்க இந்த சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்தள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சபை முதல்வரும், சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார். இதற்கு […]

முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

  • Jan 22, 2025 - 05:03 AM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் […]

செய்திகள்

இராணுவத்தினரும் பொலிஸாருமே துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்- அமைச்சர் ஆனந்த விஜேபால

  • Jan 21, 2025 - 07:15 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாடெங்கும் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்; ஒரு இராணுவ மேஜர், உட்பட 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள […]

முக்கிய செய்திகள்

திருகோணமலையில் அம்பியூலன்ஸ் விபத்து இரண்டு பேர் காயம்

  • Jan 21, 2025 - 06:47 PM
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்துள்ள அதே வேளை அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இனறு; (21) இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்  

செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் கைது அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில்

  • Jan 21, 2025 - 04:18 PM
  • 0 Comments

அரச காணிக்கான போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் […]

செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தும்- பிமல் ரத்நாயக்க

  • Jan 21, 2025 - 03:51 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியில்லை. அது அரசாங்கத்தின் அபிலாசையும் இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எனினும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை அவதானமாக பயன்படுத்துவோம் என நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்  

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp