தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்துள்ளது- பொ. ஐங்கரநேசன்.
நடைபெறவுள்ள பொது தேர்தலில் சனநாயகத் தமிழ் அரசு கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சிறுப்பிட்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி தேர்தல் மேடைகளில் தற்போது முழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் […]









