உள்ளூர்

வெடுக்குநாறி மலை ஆலய முன்னாள் உறுப்பினர்களுக்கு TID விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது வவுனியா வடக்கு வெடுக்கு

நாறி மலை ஆதி சிவன் ஆலயம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரியவருகின்றது.

ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை இன்று (9) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்

ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் முன்னாள் போராளி என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் புனர்வாழ்வு பெற்றே விடுதலையானவர்.

புனர்வாழ்வு விடுதலையின் போது வழங்கப்படும் சகல ஆவணங்களையும் விசாரணைக்கு வரும் போது எடுத்து வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

 

 

 

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை