யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கணக்காளராக திரு. வல்லவராஜன் ரதீஸ் இன்றைய தினம் (20.04.2026) காலை 09.00 மணியளவில் அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக கணக்காளர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
கணக்காளராக கடமையேற்ற திரு. வ. ரதீஸ் அவர்கள், முன்னர் யாழ்ப்பாணம் தபால் திணைக்களத்தின் – பிராந்திய கணக்கு அலுவலகத்தின் கணக்காளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
