செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை வழிபாடு..!

  • Feb 16, 2026 - 10:22 AM
  • 0 Comments

திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம். மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் நான்கு ஜாம பூசைகள் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் முதல் ஜாம பூசைகள் பி.ப 8.00 மணியளவில் பஜனை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் இந்தியாவின் திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் இடம்பெற்றது. இதன் போது பூசையில் கலந்து கொண்ட பொது […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சமஷ்டியா? ஏக்கிய ராஜ்யவா? சந்தித்துப் பேசவும் விரும்பாத இரு ”தலை”களின் பிரச்சனை

  • Feb 16, 2026 - 09:39 AM
  • 0 Comments

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி (கூட்டாட்சி) கொள்கையை பிரகடனம் செய்த இலங்கை தமிழரசுக் கட்சி ஏக்கிய ராஜ்யவுக்குள் (ஒற்றையாட்சி) சிக்கித் தடுமாறுகிறது. ஆரம்பத்தில் சமஷ்டியை ஏற்காதிருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் நிகழ்காலத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது தமிழ்ப் பேரவைக்கூடாக சமஷ்டியை முன்னிறுத்தி தீர்வை வலியுறுத்துகிறார். இவர்களை பொதுநிலைப்பாட்டில் ஒருமித்துக் கொண்டுவர சுவிஸ் தூதுவர் எடுத்த முயற்சியும் சரிவு கண்டுள்ளது. தமிழர் தேசிய அரசியல் என்பதும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு என்பதும் வேதாளம் முருங்கை மரத்தில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் நெருக்கடி நிலையில்..!

  • Feb 16, 2026 - 09:35 AM
  • 0 Comments

அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத பற்றாக்குறை நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் முகாமைத்துவ பீட மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் திலிண நிரோஷ் சுட்டிக்காட்டுகையில், முகாமைத்துவ பீடத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி பயின்ற போதிலும், அவர்களுக்குக் கற்பிப்பதற்கு 12 பேராசிரியர்கள் மாத்திரமே உள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் தற்போது 45 சதவீத விரிவுரையாளர்கள் மற்றும் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்..!

  • Feb 16, 2026 - 09:31 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17.02.2026) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை (17.02.2026) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய நிலையங்களுக்கு பரீட்சார்த்திகள் வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பலகோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது..!

  • Feb 16, 2026 - 09:28 AM
  • 0 Comments

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன், இவர்களில் ஆண்கள் இருவர் 33 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் மசாஜ் நிலையமொன்றை நடத்தி வருபவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

  • Feb 16, 2026 - 09:25 AM
  • 0 Comments

இன்றைய தினம்(16.02.2026) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் புறக்கணிப்பு..!

  • Feb 16, 2026 - 09:22 AM
  • 0 Comments

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16. 02.2026) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இறக்குமதி வாகனங்களுக்கு புதிய வரி..!

  • Feb 13, 2026 - 12:50 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் சித்திரை மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறியப்படுத்தினார். இது 2026 வரவுசெலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரியாகும். இந்த வரி அறவீடானது சுங்கத் திணைக்களத்திலேயே மேற்கொள்ளப்படும். தற்போது சுங்கத்தில் விடுவிப்புச் செயற்பாடுகளில் உள்ள வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது. வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால், […]

ஈழம் உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தர்ஷாந்த்துக்கு எதிராக யாழ் . மாநகர சபை முன்பாக போராட்டம்..!

  • Feb 13, 2026 - 12:07 PM
  • 0 Comments

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13.02.2026) யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள் கடைகள் மீது கொண்டுவரும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பிள் கடை வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களுக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஜெனீவா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்..!

  • Feb 13, 2026 - 11:02 AM
  • 0 Comments

பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழின அழிப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதி கோரிக்கையை உலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மிச்சம் (Mitcham) பகுதியில் இருந்து தொடங்கி, பிரித்தானிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp