உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிர்வாகத்தில் ஓட்டை; நோயாளிக்கு வேட்டை – தடுமாறுது சுகாதாரத் துறை!

  • Feb 25, 2026 - 10:36 AM
  • 0 Comments

நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை கடும் நிர்வாக நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அரச சுகாதார சேவையில் 16 பிரதி பணிப்பாளர் நாயகம் பதவிகள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு முதன்மையான காரணமாகும். குறிப்பாக, நாட்டின் முதன்மை மருத்துவமனையான கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாகத் தரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பதவிகள் அனைத்தும் பதில் கடமை அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருவதால், […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்..!

  • Feb 25, 2026 - 09:47 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25.02.2026) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு பங்குனி 18 ஆம் திகதி வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 5 இடங்களில் வாய்மூலக் கருத்துகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதற்கான கால அட்டவணை வருமாறு: பங்குனி 07: […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்..?

  • Feb 25, 2026 - 09:44 AM
  • 0 Comments

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு நேற்று (24.02.2026) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன், பிரதேசசபை […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

இலங்கை – நியூசிலாந்து போட்டிக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்..!

  • Feb 25, 2026 - 09:41 AM
  • 0 Comments

2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நாளை ( 25) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியைக் முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை இரவு 7:00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கொழும்பு போக்குவரத்துப் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Feb 25, 2026 - 09:38 AM
  • 0 Comments

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

ஈழம்

உற்பத்தி பொருளாதாரமும் வேளாண்மையின் பங்களிப்பும்..!

1992–1993 ஆம் ஆண்டுகளில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் முன்னெடுத்த வேளாண்மை போட்டி, அந்தக் காலகட்டத்தில் தமிழீழத்தில் நடைமுறையில் இருந்த பொருளாதார மற்றும் வேளாண்மை மேம்பாட்டு முயற்சிகளை பிரதிபலிக்கும் முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், தன்னிறைவு அடிப்படையிலான விவசாய வளர்ச்சியை உருவாக்குவதிலும் வேளாண்மை முதன்மையான ஒரு துறையாகக் கருதப்பட்ட காலப் பகுதியை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது. விவசாய உற்பத்தி உயர்வு, அறிவியல் பயிர்செய்கை, மண் மற்றும் நீர்வள மேலாண்மை, விதைத் தேர்வு போன்ற அம்சங்களில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எல்லை தாண்டிய 12 இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது..!

  • Feb 24, 2026 - 01:03 PM
  • 0 Comments

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னாரிற்குத் தெற்கு திசையில் இந்நாட்டு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். இந்த இந்திய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சிங்கள உயரடுக்கு கட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி புதைக்கப்படுகிறதா..?

  • Feb 24, 2026 - 01:00 PM
  • 0 Comments

தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய்போல் பரவியிருக்கும் உட்கட்சி மோதல், பதவி மோகத்தால் ஒருவரை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகிறது. ஆனால், அதுவே எழுபத்தைந்து வருட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழரசை அழித்துவிடுமோ என்ற அச்சம் தாயகத்தைவிட புலம்பெயர் மண்ணில்; கவலை தோய்ந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் தீவிரமாக அலசப்படும் விடயம் இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரம் அல்லது அதன் எதிர்காலம் பற்றியது. இதன் மையமாக அமைந்திருப்பது சுமந்திரனுக்கும் சிவஞானம் சிறீதரனுக்குமிடையான மோதல் என்றும் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய நபர்..!

  • Feb 24, 2026 - 12:57 PM
  • 0 Comments

காலி, படபொல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எத்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மோட்டார் சைக்கிள் 2024ஆம் ஆண்டு கரந்தெனிய பொலிஸ் பிரிவில் திருடப்பட்டது என்பதும், சந்தேகநபர் சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து..!

  • Feb 24, 2026 - 12:54 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும் மின் உற்பத்தி நிலையத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த மாதம் (மார்ச்) முதலாம் திகதி முதல் முழுமையாகப் புதிய நிலக்கரியையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகளுக்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp