உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய கண்காட்சி..!

  • Feb 25, 2026 - 12:43 PM
  • 0 Comments

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்தும் கண்காட்சி இன்று (25.02.2026) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு F.C . சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணப் பணிப்பாளர் (கிராம அபிவிருத்தி திணைக்களம் வடமாகாணம் ) திருமதி . பா. கஜானி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி பிரதேச செயலக […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குஸ் வகைப்போதைப் பொருளுடன் கிளிநொச்சியில் இரு சிங்கள மாணவர்கள் கைது..!

  • Feb 25, 2026 - 12:29 PM
  • 0 Comments

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றைய தினம்(26.02.2026) புதன் கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த பிரிவினர் ஓர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதன் போது ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உடமையில் இருந்து குஸ் வகை போதைப்பொருளை […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..?

  • Feb 25, 2026 - 11:39 AM
  • 0 Comments

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(24.02.2026) இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், பல்கலைழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். பிற்பகல் 2 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திட்டங்கள் ஆயிரம்; தீர்வு கிடைக்குமா இந்நேரம்? – கிளிநொச்சியில் அதிகாரிகள் பட்டாளம்!

  • Feb 25, 2026 - 11:14 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து அபிவிருத்தியின் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பொது நூலக நிறுவுநர் கே.எம்.செல்லப்பாவின் 130 ஆவது அகவை தினம்..!

  • Feb 25, 2026 - 11:03 AM
  • 0 Comments

யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்று (24.02.2026) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். புத்தூர் செல்லப்பா என அழைக்கப்படும் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா,1933 ஆம் ஆண்டில் புத்தூரில் தன்னிடமிருந்த நூல்களைக்கொண்டு சிறியதொரு நூலகத்தை ஆரம்பித்தார். அதன்பின்னார், 1934 ஆண்டு ஆனி மாதம் பொது நூலகம் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தென் மாகாண ஆளுநர் இன்றைய தினம் கடமை ஏற்றார்..!

  • Feb 25, 2026 - 10:57 AM
  • 0 Comments

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று (25.02.2026) காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தென் மாகாண பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். அரசியலமைப்பின் 154ஆவது சரத்தின் பிரகாரம், நேற்று (24.02.2026) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக அரச […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

அதிரடி வளர்ச்சி கண்ட இலங்கையின் ஏற்றுமதித்துறை..!

  • Feb 25, 2026 - 10:51 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு தை மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் தை மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7% வளர்ச்சியாகும் என அதன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்: தை மாதத்தில் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதுடன், இது கடந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சுரேஷ் சலே அதிரடி கைது; உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பு!

  • Feb 25, 2026 - 10:49 AM
  • 0 Comments

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இழுபறியில் மாகாண சபை; தீர்வு தருமா தேர்தல் தராசு?

  • Feb 25, 2026 - 10:45 AM
  • 0 Comments

10 ஆண்டுகள் காலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பொருத்தமான தேர்தல் முறைமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னிலையாகத் தேர்தல் ஆணைக்குழு தயாராக உள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்கனவே பல ஆய்வுகளை முன்னெடுத்துள்ள ஆணைக்குழு, அதில் சீர்செய்யப்பட வேண்டிய முக்கிய விடயங்களை அடையாளப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வாழ்வாதாரப் போர்: எக்ஸ்பிரஸ் பேர்ல் கற்றுத் தந்த பாடம் – சர்வதேச விதிகளில் வருமா மாற்றம்?

  • Feb 25, 2026 - 10:42 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் துகள்களை அபாயகரமான பொருட்களாக வகைப்படுத்துமாறு சர்வதேச அளவில் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த கோர விபத்தினால் இலங்கையின் கடற்கரைகள் மாசடைந்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சர்வதேச கடல்சார் சட்டங்களில் அவசர சீர்திருத்தங்களைக் கோரி உலகளாவிய விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். ‘நர்டில்ஸ்’ எனப்படும் இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள், கடல் சூழலுக்குப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp