விளையாட்டு

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்..!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28.02.2026) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. பதவி விலகல் தீர்மானம் குறித்து ‘ pathivunews.com’ விடுத்த வினவலுக்குப் பதிலளித்த […]

செய்திகள்

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது..!

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். மேலும், இவர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் […]

செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா..!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் இன்று (28.02.2026) நடைபெறுகிறது. இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது. புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு பொதுவாக 3500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கச்சத்தீவுக்கு வருகை தருகின்றனர். இக்கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தினாதன் கலந்துகொண்டதுடன், அவராலேயே திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து யாழ் ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது..!

  • Feb 27, 2026 - 12:58 PM
  • 0 Comments

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று (27.02.2026) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற சந்தர்ப்பத்தில் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்பொது சந்தேகநபரால் கடத்தப்பட்ட 9 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர் 25-30 வயது மதிக்கதக்கவர் என்றும், அவரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கி சூடு..!

  • Feb 27, 2026 - 12:56 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றுமொரு உழவு இயந்திர சாரதி , உழவு இயந்திரத்தை கைவிட்டு , தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நீதி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ள கையெழுத்துக்கள்..!

  • Feb 27, 2026 - 12:53 PM
  • 0 Comments

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெல்லியடி காவல்துறைக்கு எதிராக குடவத்தை மக்கள் ரஜீவன் MP யிடம் முறைப்பாடு..!

  • Feb 27, 2026 - 12:50 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், பொலிசார் மக்கள் மீது மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தியிடம் இன்றைய தினம்(27.06.2026) முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடியதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் உரித்து தேசிய வேலைத்திட்டம் இன்று..!

  • Feb 27, 2026 - 10:32 AM
  • 0 Comments

ஹிமிகம (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (27.02.2026) அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

போதை கடத்தல்காரர் பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு..!

  • Feb 27, 2026 - 10:30 AM
  • 0 Comments

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு..!

  • Feb 27, 2026 - 10:18 AM
  • 0 Comments

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp