உலகம் செய்திகள்

இராணுவ செலவினங்களை அதிகரிக்க நேட்டோ தலைவர்கள் ஒப்புதல்..!

  • Jun 25, 2025 - 10:26 PM
  • 0 Comments

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கும், இந்த நிதி ராணுவ செலவினம் என்று அழைக்கப்படுகிறது. நேட்டோவிற்கு அமெரிக்காதான் அதிக அளவில் பணம் ஒதுக்கி வந்தது. டொனால்டு டிரம்ப், 2ஆவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதிவு ஏற்றபின் மற்ற நாடுகளும் அதிக அளவில் நேட்டோவின் இராணுவ செலவினத்திற்கு செலவழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லை என்றால் […]

உலகம் செய்திகள்

கம்போடியா உடனான எல்லைகளை தாய்லாந்து மூடியுள்ளது!

  • Jun 25, 2025 - 10:05 PM
  • 0 Comments

இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்சனையால் நிலைமை கடுமையாகியுள்ளது. கடந்த மே மாதத்தில் இரு நாட்டு இராணுவத்தினரிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு கம்போடியா வீரர் உயிரிழந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்போடியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாகாணங்களில் உள்ள அனைத்து நில எல்லை சோதனைச் சாவடிகளிலும் அனைத்து வாகனங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கடப்பது கட்டுப்படுத்தப்படும் என தாய்லாந்து இராணுவம் திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

உலகம் செய்திகள்

இஸ்ரேலின் உளவாளிகள் மூவருக்கு ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றம்!

  • Jun 25, 2025 - 09:20 PM
  • 0 Comments

இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவருக்கு ஈரான் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஈரானின் தஸ்னிம் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது. ஈரானிற்குள் கொலைகளை செய்வதற்கான சாதனங்களை கொண்டுவந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய தஸ்னிம் ஊடகம் தெரிவித்துள்ளது. மதுபானங்களை நாட்டிற்குள் கொண்டுவருவது போல கொலை செய்வதற்கான ஆயுதங்களை நாட்டிற்குள் இவர்கள் கொண்டுவந்தனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கொலை செய்வதற்கு […]

உலகம் செய்திகள்

காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 லட்சம் பேர் மாயம்!

  • Jun 25, 2025 - 08:41 PM
  • 0 Comments

காசா மீது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்போரினால் இதுவரை காசாவில் சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மையில் இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 இலட்சம் பேர் மாயமாகியுள்ளனர்’ என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 3 இலட்சத்து 77ஆயிரம் […]

உலகம் செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தொடர்பில் டிரம்ப் ஒன்றும் அமெரிக்க ஊடகங்கள் மற்றொன்றும் சொல்கின்றன

  • Jun 25, 2025 - 05:25 PM
  • 0 Comments

அமெரிக்கா கடந்த வாரம் ஈரானின் அணு உள்கட்டமைப்புகளின் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் அந்த மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ‘ஈரானின் அணுத் திட்டம் மீண்டும் இயங்கவே இயலாத வகையில் அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேறு யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை’ என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை (Defense Intelligence Agency – DIA) தயாரித்த மதிப்பீட்டை மேற்கோளாகக் கொண்டு தாக்குதல்களால் ஈரானின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணியில் அமைச்சர் சந்திரசேகரனின் வாகனம் மீதும் ரஜீவன் எம்.பி. மீதும் தாக்குதல்

  • Jun 25, 2025 - 05:05 PM
  • 0 Comments

யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். இன்று மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர். இதன்பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டதுடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விரைவாக அவ்விடத்தை விட்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் பிரயத்தனம்

  • Jun 25, 2025 - 04:54 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் இன்றைய தினம் இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் பேசாலையில் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் சந்திரசேகர்

  • Jun 25, 2025 - 03:03 PM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்து மீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்திற்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (24-06) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யுத்த வடுக்களின் காயங்கள் ஆற காலங்கள் தேவையென ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

  • Jun 25, 2025 - 02:16 PM
  • 0 Comments

பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை நேற்று (24-06) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • Jun 25, 2025 - 02:06 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp