ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றி தெரிந்தும் நடவடிக்கைஎடுக்காத நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை தலைவர் நிலந்த ஜெயவர்தன், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம் பொலிஸ் ஆணைக்குழுவில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் வகையில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு தேவையான பணிப்புரை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, நிலந்த ஜெயவர்தன் தனது கடமைகளை புறக்கணித்ததாகவும், குற்றவியல் […]









