உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் 2ம்; கட்ட அகழ்வுப் பணி இன்று ஆரம்பம்

  • Jul 21, 2025 - 12:10 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில், இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது பகுதியில் அகழ்வுப் பணிகள் இன்று (ஜூலை 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் பரிந்துரைகள் மற்றும் சமர்ப்பணங்களை ஆய்வு செய்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இத்தொடர்பான அகழ்வுப் பணிகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 15 நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் தொடரவுள்ளன. இதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதி அகழ்வின் […]

வாழ்த்துக்கள்

நிஜந்தன் தஸ்மிகன் தனது 6வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்.

  • Jul 21, 2025 - 02:20 AM
  • 0 Comments

பிறந்த நாள் வாழ்த்து…! இன்று (21.07.2025) தனது ஆறாவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிஜந்தன் தஸ்மிகனுக்கு பதிவு செய்திகள் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  

உள்ளூர் செய்திகள்

செம்மணி – இனப்படுகொலை சர்வதேச விசாரனை கதவினை திறந்துள்ளது என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்

  • Jul 20, 2025 - 06:16 PM
  • 0 Comments

இறுதிப் போரின் இறுதி கட்ட போர் குற்றங்கள் இனப்படுகொலை, குற்றங்கள் ஆகியவற்றை மட்டும் விசாரிக்க முனையும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை தவறானது என்றும், இவ்வாறான விசாரணைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். செம்மணி சம்பவம் தற்போதைய சூழ்நிலையில், இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் விசாரணைக்கு புதிய வாயிலாக அமையக்கூடும் என்றும், இது சர்வதேசத்தை விரிவான விசாரணையை மேற்கொள்ள அழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருப்பதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக மக்கள் விசனம்

  • Jul 20, 2025 - 04:48 PM
  • 0 Comments

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் தற்போது கடுமையான இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேர கட்டுப்பாடுகள், உத்தியோகபூர்வ அனுமதி இல்லாமை ஆகிய காரணங்களால், மக்கள் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியாமல் தவிப்பில் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தற்காலிக பாதை வழியாக ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தாலும், இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு அனுமதிக் கடிதமும் வழங்கப்படவில்லை. 35 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள மொத்த வரி 58 வீதமென இலங்கை ஐக்கிய வணிக சங்கம் கண்டனம்

  • Jul 20, 2025 - 04:24 PM
  • 0 Comments

இலங்கையின் ஆடை உள்பட ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வரும் உண்மையான வரி விகிதம் 58 வீதம் வரை உயர்ந்துள்ளதாக இலங்கை ஐக்கிய வணிக சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரிகள் மற்றும் பிற வரிகளைச் சேர்த்தால், இந்த வரி விகிதம் 45 வீதம் முதல் 58 வீதம் வரை மாறுபடுகின்றது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக வரிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இது அவர்களின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மனைவியை பிள்ளைகளின் கண்முன்னே வெட்டிக்கொன்ற கணவன். மொனராகலையில் சம்பவம்

  • Jul 20, 2025 - 03:47 PM
  • 0 Comments

மொனராகலையில், குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே வெட்டிப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கூலி வேலைக்குச் சென்ற பெண்ணின் கணவன், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மது போதையில் வந்தார். இதன்போது அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நிறை போதையில் இருந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் உயர் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்

  • Jul 20, 2025 - 02:53 PM
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த பதவியில் பணியாற்றி வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘விஸ்டம் ஓக்’ (றுளைனழஅ ழுயம) எனும் நிறுவனம் 2016இல் நிறுவப்பட்டதுடன், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை நிர்வகித்து வருகின்றதாக சமூக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அர்ஜுன் மகேந்திரன், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா வடக்கில் நில ஆக்கிரமிப்பு குறித்து ரவிகரன் எம்பியுடன் கலந்துரையாடல்

  • Jul 20, 2025 - 02:40 PM
  • 0 Comments

வவுனியா வடக்கு பகுதியில், இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இச்சந்திப்பில், வவுனியாவடக்கில் சமீபத்தில் அதிகரித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொண்டு தடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வவுனியாவடக்கு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் […]

உள்ளூர் செய்திகள்

திருகோணமலை சம்பூரிலும் மனித எச்சங்கள் மீட்பு

  • Jul 20, 2025 - 01:20 PM
  • 0 Comments

திருகோணமலை சம்பூர் கடற்கரையோர பகுதியில் கண்ணிவெடி அகழும் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை (17-07) நிலக்கீழ் கண்ணிவெடிகள் அகழும் பணியை எம்.ஏ.ஜி நிறுவனத்தினர் தங்களுடைய உபகரணங்களுடன் ஆரம்பித்திருந்தனர். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்த இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டிருந்த அந்நிறுவனம், கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (20-07) மேற்கொண்ட அகழ்வுப் […]

உள்ளூர் செய்திகள்

முன்னணியின் அழைப்பினை தமிழரசுக் கட்சி நிராகரித்தது

  • Jul 20, 2025 - 01:12 PM
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் மற்றும் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இன்று நடைபெறும் முக்கியக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். எனினும், இந்த சந்திப்பில் இலங்கைத்தமிழரசுக் கட்சி பங்கேற்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp