மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
What’s your Reaction?
