நூரிய பகுதியில், நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு வீடுக்கு அருகில் 14 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் நேற்று (ஜனவரி 2) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிரதேசவாசிகள் சிலர் இதற்கான தகவலை நூரிய பொலீசாருக்கு வழங்கியுள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த போது, சிறுவன் உயிரிழந்த நிலையில் தரையில் கிடந்துள்ளார்.
சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் நூரிய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
