ஆசிரியர் கருத்துக்கள் வணிகம்

ஆசிரிய தலையங்கம். 323 சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு வர்த்தக வசதியை மேம்படுத்துவதற்கு?

e0ae86e0ae9ae0aebfe0aeb0e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88e0aeafe0ae99e0af8de0ae95e0aeaee0af8d 323 e0ae9ae0aeb0e0af8de0ae9ae0af8de0ae9a | Pathivu News

இலங்கை சுங்கத்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக தற்போதுள்ள சர்ச்சை, ஒரு சாதாரண நிர்வாக விஷயமாக அல்ல் இது நாட்டின் சட்டத்திற்கும், அரசின் பொறுப்புக்கும் நேரடியான சவாலை முன்வைக்கிறது.

2024 ஜூலை முதல் 2025 ஜனவரி வரை, 323 கொள்கலன்கள் உரிய சோதனை இன்றி சுங்கத்தால் விடுவிக்கப்பட்டது, நாட்டின் பாதுகாப்பு, வருவாய், மற்றும் நம்பிக்கைக்கு எதிரான செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இது ஒரு அலட்சியமான தவறு அல்ல — இது திட்டமிட்ட முறையில், ‘வர்த்தக வசதி’ என்ற போர்வையில், நடைமுறை விதிகளை மீறிய செயல் என்பதை நிதி அமைச்சின் விசாரணைக் குழுவின் அறிக்கையே உறுதிபடுத்துகிறது.

பாராளுமன்றத்தில் நடந்த சமீபத்திய விவாதத்தில், இந்த விடயங்கள் மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டன. எதை சோதிக்க வேண்டும்? எதை தவிர்க்கலாம்? என்பதற்கான ‘சுளைம ஆயயெபநஅநவெ’ முறைமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்த முறைகள் “red” மற்றும் “yellow” என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், 999 உயர் அபாயக் கொள்கலன்கள் 13 முறை சோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளன என்பது வெறும் கணக்குப் பிழை அல்ல, தேசிய பாதுகாப்பு மீதான கடும் அசட்டையும், சட்ட மீறலும் ஆகும்.

சுங்கத்துறை அதிகாரிகள் விளக்குகிறார்கள்: ‘நெரிசலால் பொருள்கள் சிக்குவதைக் கட்டுப்படுத்த, சோதனைகள் தவிர்க்கப்பட்டன வருமானத்தை அதிகரிக்கவே இது செய்யப்பட்டது.’ ஆனால் நாம் கேட்கவேண்டிய கேள்வி – ‘வணிக வசதி என்ற பெயரில் நாட்டின் சட்டத்தையும், பாதுகாப்பையும் புறக்கணிக்க முடியுமா?’

இந்த கேள்வி வெறும் எதிர்க்கட்சி அல்லது ஊடகம் எழுப்பும் ஏக்கமல்ல. இது ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு நாட்டின் வருமானம் மக்களின் வணிகத்தில் மட்டுமல்ல, அவர்கள் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் சட்ட ஒழுங்கின் மீதும் அமைகிறது.
அந்த நம்பிக்கையை சுங்கத்துறை தன்னுடைய ‘ஃப்ளெக்ஸிபிள்'(flexible) நடவடிக்கைகளால் சிதைத்துவிட்டது.

இதனை சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சென்றதாகவும், ஆனால் அதற்குப் பதில் எதுவும் இன்னும் இல்லை.

பாராளுமன்றம் இந்நிலையில் தவறாகச் செயல்பட்டதா? அல்லது இந்த விடயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அரசு உயரதிகாரிகள் மூலமாகவே பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்பதுதான் மக்கள் முன் எழும் பெரிய சந்தேகம்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், இதுபோன்ற விஷயங்கள் விசாரணை கூறுகளுக்குள் அடைக்கப்படுவதால், மக்கள் நம்பிக்கையே தினசரி கருகுகிறது.

இதில் ஒரே தீர்வே – பொதுமக்களுக்கு முழுமையான தகவலை வெளிப்படையாக வெளியிட வேண்டும். உரிய தரவுகள், எந்த தரப்பின் அழுத்தங்கள், எந்த அதிகாரிகள் அனுமதி வழங்கினர் என்பதைப் புலப்படுத்தி, அவர்களை நீதியின் முன் கொண்டு வருவதில் அரசு காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
e0aeaae0aebfe0aea3e0af88e0ae95e0aeb3e0af8d e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeaee0af8d e0aeaae0aeb0e0aebfe0aeb5e0aeb0e0af8de0aea4e0af8d | Pathivu News
வணிகம்

பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp