செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

  • Dec 20, 2024 - 05:47 PM
  • 0 Comments

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்காக குறித்த வழக்கின் குற்றவாளிகளான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் […]

உள்ளூர்

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது

  • Dec 18, 2024 - 08:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்திக்கருகில மின்சாரம் தாக்கி நேற்று மாலை பசுவொன்று பலியானது அது தொடர்பில் பிரதேச வாழ் மக்கள் மின்சாரம் இவ்வாறு வீதியில் வந்தால் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு என மின்சார சபை உத்தியோகஸ்த்தரை மக்கள் வினாவினர் மின்சார சபையா? மாநகர சபையா? டெலிகொம் நிறுவனமா? யார் காரணம்.  

செய்திகள்

நாடு சரியான திசை வழியில் செல்ல அனைவரும் உதவ வேண்டும்- தோழர் சுகு

  • Dec 14, 2024 - 08:48 AM
  • 0 Comments

ஒரு நம்பிக்கை கீற்று இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சமூக அரசியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் சமூக மட்டத்தில் ஜனநாயக இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது . மறைந்த தமது பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த வீதிகள் நிலங்களை மக்களிடம் ஒப்படைக்கும் காரியங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன . இன மத வாதத்துடன்எவ்வித சமரசமும் இல்லை என ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தோழர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது . நாட்டின் நிர்வாக […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு….! (காணொளி)

  • Dec 14, 2024 - 12:44 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=DbQa20cTiGA

செய்திகள்

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் நாளை தீர்மானம்?

  • Dec 12, 2024 - 07:54 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சோ.சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார். இருப்பினும் குறித்த காலப்பகுதி பாராளுமன்றத் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தமையால் மாவையின் கடிதம் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றே கட்சியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி மாவை […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 213 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

  • Dec 12, 2024 - 10:42 AM
  • 0 Comments

காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் 213 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள கஞ்சாவுடன ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்  

உள்ளூர்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு!

  • Dec 9, 2024 - 06:59 AM
  • 0 Comments

வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை 10 ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அந்த தினத்தில் அகற்றப்படாது விட்டால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் […]

செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது

  • Dec 7, 2024 - 07:29 PM
  • 0 Comments

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான வரைவுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. […]

செய்திகள்

மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல

  • Dec 6, 2024 - 06:04 PM
  • 0 Comments

சபாநாயகர் அசோகரன்வல ஒரு பட்டதாரி என்பதை அவர் நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்மையான அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகிந்த தேசப்பிரிய இவ்வாறு சொன்னதால் தற்போதைய சபாநாயகர் அசோகரன்வல ஓல். எல் தாண்டவில்லையா என மக்கள் […]

உள்ளூர்

வடக்கில் இந்தியாவும் சீனாவும் முதலீட்டில் போட்டி?

  • Dec 4, 2024 - 10:28 AM
  • 0 Comments

இந்திய 15 முதலீட்டாளர்கள் 15 பேர் யாழ் வரவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெறும் வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் […]