பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடுவதால் இனங்கள் ஐக்கியப்படும்- சபாநாயகர்
தைப்பொங்கல் பண்டிகை இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழரசுக் கட்சி, ஜேவிபி இன் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய […]









