தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்..!
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை – நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா […]









