illegal beedi leaves arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகளுடன் இருவர் கைது..!

  • May 12, 2026 - 01:23 PM
  • 0 Comments

கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கற்பிட்டியின் ஆலங்குடா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, இரண்டு […]

mullivaikkal rally jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருந்து ஆரம்பமான முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனி..!

  • May 12, 2026 - 01:15 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்றைய தினம்(12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்திப் பவணியானது, வட,கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சென்று மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணை சென்றடைய உள்ளது. அதேவேளை தியாக தீபத்தின் நினைவிடத்தின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/917819587973649

jaffna airport expansion | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

  • May 12, 2026 - 12:57 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போதே விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, குறித்த கலந்துரையாடலில், மாணவர் பற்றாக்குறையால் […]

mullivaikkal remembrance pooja | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சந்நிதியில் பூஜை..!

  • May 12, 2026 - 12:17 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம்(12.05.2026) செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றன

araneri teachers seminar | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு..!

  • May 12, 2026 - 11:56 AM
  • 0 Comments

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு கல்முனை வடக்கு நாவிதன்வெளி பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான கருத்தரங்கு இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு கல்முனை வடக்கு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் திரு T. J.. அதிசயராஜ் அவர்களின் தலமையில் இடம்பெற்றது […]

mahinda bribery probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்..!

  • May 12, 2026 - 10:44 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு அங்கு முன்னிலையாகியுள்ளார். முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sl weather today 11 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • May 12, 2026 - 10:25 AM
  • 0 Comments

12.05.2026 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் […]

oil price rise | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை..!

  • May 11, 2026 - 10:39 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்படாததே, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.1 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது. […]

landslide alert 5 districts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

  • May 11, 2026 - 10:33 AM
  • 0 Comments

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (11.05.2026) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: பதுளை மாவட்டம்: பசறை குருநாகல் மாவட்டம்: ரிதிகம மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை மொனராகலை மாவட்டம்: […]

yaazh devi service | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் தேவி தொடரூந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..!

  • May 11, 2026 - 10:06 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான யாழ் தேவி (Yal Devi) ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயண விபரங்கள்: இலங்கை புகையிரத சேவையின் அறிவிப்பின்படி, யாழ் தேவி புகையிரதத்தின் பயண நாட்கள் மற்றும் ஒழுங்குகள் வருமாறு: கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம்/காங்கேசன்துறை நோக்கி: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும். யாழ்ப்பாணம்/காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி: செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும். வடக்கு ரயில் பாதையில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp