உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!

  • Apr 6, 2026 - 11:10 AM
  • 0 Comments

பனாமுறை, வேஅதுர பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (05.04.2026) இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவர் அவரை தாக்கியதுடன், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்காலிகமாக இடைநிறுத்தபட்ட அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

  • Apr 6, 2026 - 10:05 AM
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (06.04.2026) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கும் மஹிந்த கம்பனிக்கு இடையேயும் வேறுபாட்டை காணமுடியாமல் உள்ளது..!

  • Apr 6, 2026 - 10:02 AM
  • 0 Comments

கடந்த. ஜனாதிபத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பன இடம்பெற்ற காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்களால் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளமை வேதனையளிக்கும் விடயமாகும். அதில் ஒன்றுதான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவோம் என்பதாகும். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமை பொதுமக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குறிப்பிட்டார். இத் தொழிற்சங்கத்தின் உயர்பீட கூட்டம் நேற்றைய தினம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி மண்ணின் முதல் பொறியியலாளர்..!

  • Apr 6, 2026 - 10:00 AM
  • 0 Comments

இவ்வாண்டில் வெளியாகிய கல்வி பொது உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியை சேர்ந்த திரு. திருமதி. இரவிச்சந்திரன் மனோகரி தம்பதிகளின் புதல்வன் செல்வன் பவதாருணன் அவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்பாறை மாவட்டத்தில் 14வது இடத்தையும் தேசிய மட்டத்தில் 840 வது இடத்தையும் பெற்று புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் முதல் பொறியியல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிராமத்துக்கும் எதிர்கால கல்வி சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், புதிய வளத்தாப்பிட்டி […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

2026 இலும் தோல்வியில் சென்னை அணி..!

  • Apr 6, 2026 - 09:53 AM
  • 0 Comments

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (05.04.2026) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டிம் டேவிட் 25 […]

முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள் புதியவை

இன்று ஆரம்பமாகிறது தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்..!

  • Apr 6, 2026 - 09:51 AM
  • 0 Comments

இன்று (06.03.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 6, 2026 - 09:47 AM
  • 0 Comments

06.04.2026 வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு ; நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!

  • Apr 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி உடனடி ஓய்வு: பென்டகன் உறுதி செய்தது..!

  • Apr 3, 2026 - 09:57 AM
  • 0 Comments

இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ், உடனடியாகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பலகோடிரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது..!

  • Apr 3, 2026 - 09:48 AM
  • 0 Comments

பலகோடிரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது..! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று(02.04.2026) மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp