ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் தாந்தாமலை விஜயம்…
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பை ஏற்று ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் சாரா ஹசல்பர்த் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கான விஜயத்தினையும் முன்னெடுத்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் தொல்பொருள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தெரிவித்திருந்தார். மேலும் விசேடமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தினையும் தொல்பொருள் […]









