உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கச்சத்தீவில் புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்தல்

  • Mar 16, 2025 - 07:58 AM
  • 0 Comments

இது குறித்து மேலும் தெரிஎயவருவதாவது கச்சதீவு முன்னரங்க பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் கச்சதீவுக்குள் செல்ல விசேட அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தினை நோக்கி பயணித்த பொழுது சிவில் உடை தரித்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை சூழந்து கொண்டு இந்தியாவில் இருந்தா வருகை தந்தீர்கள் ? ட்ரோன் கமரா கொண்டு செல்கிறீர்கள் என விசாரித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன் ஊடகவியராளர்களை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் இலங்கை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடற்தொழில் அமைச்சரை தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு

  • Mar 14, 2025 - 09:19 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது , மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே அப்பகுதி இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பொன்னாலை […]

செல்வம் அடைக்கலநான் எம்பியின் கண்டுபிடிப்பு. உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செல்வம் அடைக்கலநான் எம்பியின் புதிய கண்டுபிடிப்பு.

  • Mar 6, 2025 - 10:36 AM
  • 0 Comments

மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு தமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (05-03-2025) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய ரோலர் […]

யாழ்ப்பாணம் கொக்குவில் வாள் வெட்டு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள் வெட்டு

  • Mar 4, 2025 - 08:46 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர். அந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் , […]

செய்திகள்

எதிர்காலத்தில்; மத்திய அரசும் மாகாண சபையும் இணைந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்- கடற்றொழில் அமைச்சர்

  • Mar 2, 2025 - 12:38 PM
  • 0 Comments

கடற்றொழில் தொடர்பில் கடந்த காலங்களில் மத்திய அரசும் மாகாண சபையும் இரண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியமையினால் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர்களுக்கும் மத்திய அரசாங்க கடற்றொழில் அமைச்சின் பிரதானிகளுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை 28 ம் திகதி கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சுதுமலையில் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவர் 1600 போதை மாத்திரைகளுடன் கைது

  • Mar 2, 2025 - 11:26 AM
  • 0 Comments

இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் பொழுது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். தொடர்ந்து இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

  • Mar 2, 2025 - 10:01 AM
  • 0 Comments

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்

  • Mar 2, 2025 - 09:39 AM
  • 0 Comments

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அதானி நிறுவனத்தின் நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக தருமாறு அரசாங்கம் கோரிக்கை

  • Mar 1, 2025 - 03:45 PM
  • 0 Comments

மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். நெடுந்தீவு மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சந்தித்தனர்

  • Mar 1, 2025 - 02:24 PM
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவுக்கான கள விஜயம் ஒன்று ஆணையாளர் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் (28-02-2025 ) மேற்கொள்ளப்பட்டது. இந்த களவிஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச மக்களது மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நெடுந்தீவிலுள்ள பொது அமைப்புகளிடமும் பொது மக்களிடத்திலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தை. தனராஜ் ஆணைக்குழுவின் சர்வதேச […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp